Elavenil Valarivan: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி; தங்கம் வென்று அசத்திய தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன்

Elavenil Valarivan: இதுவரை 11 நாடுகள் உலகக் கோப்பையில் பதக்கம் வென்றுள்ளதால், இத்தாலி இரண்டு தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்திலும், இந்தியா ஆர்மீனியாவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

Continues below advertisement

ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒலிம்பிக் ஷூட்டிங் சென்டர் ரேஞ்சில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், தற்போது நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை ரைபிள் என்கிற பிஸ்டல் பிரிவில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது தங்கம் வென்றுள்ளார்.

Continues below advertisement

24-ஷாட்கள் முழுவதும் 10.1 க்குக் கீழே ஸ்கோர் செய்யாத வலிமையான எட்டுப் பெண்கள் இறுதிப் போட்டியில் இளவேனில் வெற்றி பெற்றார். இளவேனில் வாலறிவன் 252.2 மதிப்பெண்களுடன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். பிரான்சின் 20 வயது வீராங்கனை ஓசியான் முல்லரை 251.9 உடன் வெள்ளி வென்றார். சீனாவின் ஜாங் ஜியாலே வெண்கலம் வென்றார்.

முன்னதாக சனிக்கிழமை காலை அதாவது செப்டம்பர் 16ஆம் தேதி இந்திய வீராங்கனையான இளவேனில் வாலறிவன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அந்த சுற்றில் 630.5 மதிப்பெண்களுடன் எட்டாவது மற்றும் கடைசி இடத்தைப் பிடித்தார்.  இறுதிப் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த முல்லர் , இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் 633.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இரண்டு சீன துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் ஜாங் ஜியாலே மற்றும் ஜாங் யூ  தவிர, நார்வேயின் ஐரோப்பிய சாம்பியனான, ஜீனெட் ஹெக் டூஸ்டாட் இறுதிப் போட்டியில் களமிறங்கினர். 

ஜாங் ஜியாலே முதல் ஐந்து ஷாட்களுக்குப் பிறகு 53.4 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தார், அதே நேரத்தில் பிரென்சு வீராங்கனை எலா 52.6 இல்  இரண்டாவது இடத்தில் இருந்தார். 

ஆஸ்திரியாவின் மார்லீன் பிரிபிட்சர் தனது முதல் ISSF உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 12 ஷாட்களுக்குப் பிறகு எட்டாவது இடத்தில் முதலில் வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில், போட்டி வெளிப்படையாக இந்திய, ஓசியன் மெல்லர், ஜீனெட் ஹெக் டூஸ்டாட் மற்றும் இரண்டு சீனர்களுக்கு இடையிலான போராக மாறியது.

16-ஷாட்டுகளுக்குப் பிறகு, ஓசியான் டூஸ்டாட் மற்றும் எலாவைவிட முன்னிலை வகித்தார்.  அவரது 17வது ஷாட்டுக்கு 10.9 புள்ளிகள் எடுத்தார், இதன் பொருள் இந்திய வீரர் 18-ஷாட்டுகளுக்குப் பிறகு இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மேலும் இறுதி இரண்டு ஷாட்கள் எஞ்சியிருந்த நிலையில், பிரெஞ்சு வீராங்கை தனது 22வது ஷாட்டுக்கு 9.8 என்ற புள்ளியை எலா எடுத்ததால், ஓசியானுடன் 0.5 என்ற புள்ளி வித்தியாசத்தில் இருந்தார். ஜியாலே வெண்கலப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அதன்பிறகு எலா இரண்டு திடமான 10.6 வினாடிகளுடன் நம்பிக்கையுடன் வெளியேறினார், ஓசியானின் 10.8 மற்றும் 10.6 இருந்தபோதிலும், இந்திய வீரர் 0.3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தனிப் போட்டியாளரான சந்தீப் சிங் 628.2 புள்ளிகளுடன் 14வது இடத்தைப் பிடித்தார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை, இந்திய வீரர்கள் இளவேனில் மற்றும் சந்தீப் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணியில் இணைந்து 629.1 மதிப்பெண்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தனர். 42 அணிகள் கொண்ட களத்தில் இந்திய ஜோடியை விட 0.5 புள்ளிகள் முன்னிலையில் இருந்த இஸ்ரேலுக்கு நான்காவது இடம் பிடித்தது. எலா 314.8 புள்ளிகளையும், சந்தீப் 314.3 புள்ளிகளையும் எடுத்தார், இந்திய வீரர்கள் ஒரு ஷாட்டை வெண்கலத்தில் தவறவிட்டனர். இறுதியில் இஸ்ரேல் வெண்கலம் வென்றது, ஜெர்மனி தங்கம்  வென்றது மற்றும் ஹங்கேரி வெள்ளி வென்றது.

16 பேர் கொண்ட இந்திய அணி ரியோ உலகக் கோப்பையில் ஏழு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறது. இதுவரை 11 நாடுகள் உலகக் கோப்பையில் பதக்கம் வென்றுள்ளதால், இத்தாலி இரண்டு தங்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்திலும், இந்தியா ஆர்மீனியாவுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola