குருகிராம் காவல்துறைக்கு தனது சொந்த செலவில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கி அளித்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.

அவரது இந்த ஈகை, நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே வேளையில் தனது நற்செயலை தேசத்துக்கு ஆற்றும் நன்றிக்கடன் எனக் குறிப்பிட்டு விண்ணைத் தொட்டு நிற்கிறார் ஷிகர் தவான்.

இயற்கைப் பேரிடரோ அல்லது இப்போது ஏற்பட்டிருக்கும் மருத்துவப் பேரிடரோ மனிதநேயத்தை வெளிக்கொணர்ந்து இந்த பூமி இவர்களைப் போல் உள்ளோர் இருக்கும் வரை உய்க்கும் என்பதை மெய்ப்பித்துக் காட்டிவிடுகிறது.

 



அத்தகைய நல் உள்ளங்கள் வரிசையில் இணைந்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். தான் நீட்டிய உதவிக்கரம் குறித்து சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கு அவர் அழகான, அழுத்தமான விளக்கம் நல்கியிருக்கிறார். இது நிச்சயமாக இன்னும் பல இளைஞர்களை, நல் உள்ளம் கொண்டோரை ஊக்குவித்து நெருக்கடியான காலகட்டத்தில் தேசத்துக்கு தோள் கொடுக்க உதவி செய்யும்.

முதலில் குருகிராம் போலீஸார்தான் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் ஷிகர் தவானின் உதவியைப் பற்றி வெளியிட்டிருந்தனர். அந்த ட்வீட்டரி தி இந்தியா இண்டர்நேஷனல் என்ற அமைப்பு ரீட்வீட் செய்தது.

 

இந்நிலையில், தனது உதவி குறித்து ஷிகர் தவான், "பெருந்தொற்று காலத்தில் என் தேச மக்களுக்கு நன்றியுடன் சேவை செய்கிறேன். இது சிறிய உதவி. எப்போதும் என் மக்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன். இந்தியா இப்பெருந்தொற்றிலிருந்து மீண்டுவந்து நிச்சயமாக ஒளிரும்" என ட்வீட் செய்திருக்கிறார்.

களத்தில் சிங்கம் போல் கர்ஜிக்கும் ஓர் இளம் வீரரின் இந்த நம்பிக்கை வார்த்தைகள் கரோனாவை எதிர்த்துப் போராடுபவர்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Grateful to serve my people in this pandemic through this small token of help! Always ready to help my people and society to my best. India shall rise and shine against this pandemic! <a >https://t.co/bHlq0eJvUv</a></p>&mdash; Shikhar Dhawan (@SDhawan25) <a >May 14, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

 

ஷிகர் தவான் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சார்ந்த அணி இதுவரை நடந்த போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்விகள் என நல்ல நிலையில் இருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு அடுத்த படியாக சிஎஸ்கே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. நடப்பு ஐபிஎல் போட்டியில் ஷிகர் தவான் 380 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் பெறுவதற்கான தகுதியுடோர் பட்டியலில் இடம்பெற்றிந்தார்.

 



ஆனால், ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரானது கடந்த வாரம் காலவரையின்றி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வீரர்களுக்கு அடுத்தடுத்து கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை உடனடியாக பிசிசிஐ மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து இந்தத் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் அவர்களது தாயகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.