டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 தொடக்க நிகழ்வுகளைப் பார்ப்பதற்கான இந்திய நேரம் என்ன? 


23 ஜூலை 2021 அன்று இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகளைக் காணலாம். போட்டிகளின் நிறைவு விழா 8 ஆகஸ்ட் அன்று நடைபெறும். 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் எந்த இடத்தில் நிகழ்கிறது? 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அந்த நகரத்தின் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நேரலையில் எங்கே காண முடியும்? 


டிடி தொலைக்காட்சி மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்தப் போட்டியின் நேரலைகளைக் காணலாம். மேலும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் டென்1, டென்2 மற்றும் டென்3 யிலும் இந்த நிகழ்வுகளைக் காணலாம். 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்வது எப்படி?


சோனி லைவ் (Sony Liv) வழியாக ஆன்லைனில் பார்க்கலாம். தொடர் அப்டேட்களை நமது ABP Nadu செய்திகளில் காணலாம்.




டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் 120க்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். இது கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்ற 117 பேர் கொண்ட இந்திய அணியை விட மிகவும் அதிகமான ஒன்று. 


2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்காக,  உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர் வீராங்கனைகள் டோக்கியோவை நோக்கி பயணப்பட்டு வருகின்றனர். 



இந்த தருணத்தில், உலக சுகாதார மையத்தின் இயக்குனர், மருத்துவர். டெட்ரோஸ், ஒலிம்பிக் தொடர் நடைபெற்று முடியும் தருவாயில், கொரோனா பாதிப்பால் 1,00,000க்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ”கொரோனா தொற்று பரவல் முடிந்துவிட்டதாக எண்ண வேண்டாம். இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழ்ந்துள்ளனர். இனியும் மக்கள் உயிரிழக்கக்கூடும்.” என அதிர்ச்சி அளித்துள்ளார். 



இந்நிலையில், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்,ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானங்களில் 10,000 பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என ஜப்பான் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் குழு கடந்த மாதம் இறுதியில் அறிவித்திருந்தது.கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு ரசிகர்கள் ஒலிம்பிக் போட்டியை காண தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், உள்ளூர் ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.


முன்னதாக, எனினும், கொரோனா பரவல் அதிகமானால், ரசிகர்கள் அனுமதிக்கப்படாத மைதானங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் எனவும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் அரசு, டோக்கியோ அரசு, ஒலிம்பிக் தொடர் அமைப்பாளர்கள் குழு, சர்வதேச ஒலிம்பிக் குழு, பாரலிம்பிக் ஒலிம்பிக் குழு ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் இது குறித்து ஆலோசனை நடத்தினர்.