பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்க உள்ளது.அந்தவகையில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 329 நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. 32-க்கும் அதிகமான விளையாட்டுகள் நடக்க இருக்கின்றன.இதில் இந்தமுறை புதிதாக இணைந்துள்ள போட்டி என்ன என்பது தொடர்பான தகவல்களை இங்கே பார்ப்போம்:


பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் புதிதாக இணைந்துள்ள போட்டி பிரேக் டான்சிங் என்று அழைக்கப்படுகின்ற பிரேகிங் போட்டி தான். அதேபோல் கயாக் கிராஸ் என்ற போட்டியும் இந்த முறை ஒலிம்பிக் தொடரில் இணைக்கப்பட்டுள்ளது. 


பிரேக் டான்சிங் என்றால் என்ன? 


பிரேக்கிங் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது. யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள சில ஆப்பிரிக்க அமெரிக்க சமூகங்கள் பொதுவாக பிரேக்டான்சிங், பி-பாய்யிங் மற்றும் பி-கேர்லிங் போன்ற பிற பெயர்களின் தோற்றத்துடன் தொடர்புடையவை. இப்போது ஒரு விளையாட்டாக அறிமுகமாக உள்ளது, பிரேக்கிங் சாராம்சத்தில் ஒரு நடன வடிவமாக உள்ளது, இது உலகளவில் பரவலாக இடம் பெற்றுள்ள விளையாட்டாக உள்ளது.




அதனால் தான் இந்த போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களின் ஒன்றான பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இடம் பெற்றது. பொதுவாக பிரெஞ்சு நாட்டில் அதிகம் இந்த போட்டிகள் தெருக்களில் நிகழ்த்தப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. முதன் முதலில் பிரேக்டான்சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு யூத் ஒலிம்பிக் விளையாட்டுகளில் அறிமுகமானது.அப்போது அதிகம் பார்வையாளர்களை கவர்ந்ததால் இந்த முறை ஒலிம்பிக் தொடரில் இணைக்கப்பட்டுள்ளது.


பாரீஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுகளில் பிரேக்கிங்:



பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில், நிகழ்வுகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன, இதில் 16 பங்கேற்பாளர்கள் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் ஒருவருக்கொருவர் போட்டியிட உள்ளனர். ஆரம்பச் சுற்றில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதியில் இறுதிப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒரு சிறந்த மூன்று வடிவமாக இருக்கும்.


ஒவ்வொரு பிரேக்கருக்கும் ஒரு நிமிட கால அவகாசம் வழங்கப்படும். ஒரு வீரர்  முடித்தவுடன், மற்றவர் உடனடியாக தொடங்க வேண்டும்.  இதனை கண்காணிபதற்கு குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு இருக்கும். அவர்கள் செயல்திறனை மதிப்பிடுவார்கள் மற்றும் வெவ்வேறு அளவுருக்களின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.