ஐபிஎல் போட்டிகளில் பெண்களையும் இடம்பெற வைக்கலாம் என கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே யோசனை தெரிவித்துள்ளார். நேற்று நடந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான T20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஷபாலி வர்மா, அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அசத்தினார். 


இந்த நிலையில் டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள பிரபல கிரிக்கெட் வர்ணனைணயாளர் ஹர்ஷா போக்ளே, ஐபிஎல் போட்டிகளில் ஆண்களோடு சேர்த்து  பெண்களையும் களமிறக்க வேண்டுமென யோசனை தெரிவித்துள்ளார். RCB அணியில் ஷபாலி வர்மாவும் சென்னை அணியில் மிதாலி ராஜம் டெல்லி அணியில் ஹர்மன் பிரீட்டும் இருந்தால் எப்படி இருக்கும் எனவும் அவர் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.