மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் போல்வால்ட் வீராங்கனை பரணிக்கா. இவர் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி (இன்டர்-ஸ்டேட் அத்லெட்டிக் நேஷனல் சாம்பியன்ஷிப் 2022) ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற போல்வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 




TN Rains: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு- எந்த மாவட்டங்கள் தெரியுமா..!


அவர் அந்தப் போட்டியில் 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்தார். இந்நிலையில்  ஆகஸ்ட் 20 -ம் தேதி கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 2022 சர்வதேச போல்வால்ட் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பரணிகா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இப்போட்டியில் முதலிடம் பிடித்த ஜப்பான் நாட்டு வீராங்கனை 4.10 மீட்டர் உயரமும், இரண்டாம் இடம் பிடித்த மலேசிய நாட்டு வீராங்கனை 4 மீட்டர் உயரமும் தாண்டிய நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்ற பரணிக்கா 3.90 மீட்டர் உயரம் தாண்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச போல்வால்ட் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ள பரணிகாவை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.




சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பு. தடுப்பு சுவர் அமைக்க மீனவர்கள் கோரிக்கை!


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடல் அரிப்பு ஏற்பட்டு கடந்த 40 நாட்களில் சுமார் 600 மீட்டர்  கடல் நீர் கிராமத்தில் உட்புகுந்துள்ளது. மேலும்,  தொடர்ந்து கடல் அரிப்பு  ஏற்பட்டு வருவதால்  மீனவ கிராம மக்கள் படகுகளை கடலுக்குள் செலுத்துவதிலும், பின்னர் கரை மேலே கொண்டுவரவும் மிகுந்த சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மீனவர்கள் கடல் அரிப்பை தடுக்க கடற்கரை பகுதியில் கருங்கற்களை கொட்டி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Ponniyin selvan: வெளியானது மேக்கிங்... சோழா சோழா பாடல் படப்பிடிப்பும்... அதை படம் பிடித்த படபடப்பும்!




இதனை அறிந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் நேரடியாக கடற்கரை பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கருங்கற்கள் கரையோர பகுதியில் கொட்டி பலப்படுத்தப்படும் எனவும், கடல்  அரிப்பை தடுக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் உறுதியளித்தனர்.


Engineering Counselling: பொறியியல் சிறப்புக் கலந்தாய்வு: யார், யாருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு?- முழு விவரம்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண