தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்களுக்கு கரூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


 




 


 


யூத் கேம்ஸ் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா (Youth Games Federation  of India) சார்பில்  ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு அணியில் கரூர் மாவட்டத்தை  சேர்ந்த விக்னேஸ்வர், நவலடி, விமல், பிரனேஷ்வரன், குமரேசன் ஆகிய 5 பள்ளி மாணவர்கள், தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.


வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு கரூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பாரதம் மர்சியல் ஆர்ட்ஸ் சிலம்பம் அகாடமி பயிற்சியாளர்கள் கிருஷ்ணராஜ், சௌந்தரராஜ் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். தமிழக அணியின் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் 108 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாடு அணி பெற்றது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். 


 




 


ஏப்ரல் மாதம் இறுதியில், நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில், கரூரை சேர்ந்த ஐந்து மாணவர்களும் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். மேலும், மத்திய அரசு பணியில் சேர்வதற்கான படிவம்-2 சான்றிதழும் தற்பொழுது முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளது என பயிற்சியாளர் தெரிவித்தார். 


 




கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உள்ளிட்டவைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நிதி உதவி அளித்தால் உதவியாக இருக்கும் என்று வெற்றி பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர்.