ஐபிஎல் போட்டிகளில்எக்ஸ்டிராக்கள் இல்லாமல் முதல் ஓவரில் அதிக ரன் குவித்த பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது ராஜஸ்தான் அணி.


ராஜஸ்தான் vs கொல்கத்தா


நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேஸிங்கின் இரண்டாவது ஓவரில் பட்லர் டக் அவுட் ஆனாலும், வெகு இலகுவாக அணியை வெற்றிப்பாதைக்கு இழுத்து சென்றார் ஜெய்ஸ்வால். அதோடு ஐபிஎல்லின் அதிவேக அரைசதம் அடித்த சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல சாதனைகளை தன்வசப்படுதியுள்ளார்.


இந்த போட்டியில் ஜெய்ஸ்வாலுக்காக ராஜஸ்தான் அணியின் மூத்த வீரர்கள் இருவரும் சில தியாகங்கள் செய்தனர். ரன் அவுட் ஆகி, பட்லர் விக்கெட்டையே தியாகம் செய்தார். பட்லர் வரவேண்டாம் என்று சொல்லியும் பாதி தூரம் ஓடி வந்துவிட்ட ஜெய்ஸ்வாலுக்காக ஓடிய பட்லரை நேராக ஸ்டம்பில் அடித்து ஆட்டமிழக்க செய்தார் ரசல். இறுதியாக ஜெய்ஸ்வால் வின்னிங் ஷாட் அடித்து வெற்றியை பெற்றுத்தருவதற்காக வைடுக்கு சென்ற 12வது ஓவரின் கடைசி பந்தை ஸ்ட்ரோக் வைத்து ஜெய்ஸ்வாலுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.



ராஜஸ்தான் அணி வெற்றி


ஜெய்ஸ்வால் பவுண்டரி அடித்து வெற்றியை பெற்றுத்தர, 47 பந்துகளை சந்தித்த அவர் 98 ரன்கள் குவித்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். உடன் ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். ஆட்டம் ஆரம்பித்ததில் இருந்தே எந்த பவுலர் என்றெல்லாம் பார்க்காமல் பந்தை பவுண்டரிக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். இத்தனைக்கும் இரண்டாவது பேட்டிங் ஆடிய அவர்களுக்கு இலக்கு 150 தான். ஆனால் முதல் இரண்டு ஓவர்களிலேயே 40 ரன்கள் குவித்து விட்டனர். அதற்கு முழு காரணம் ஜெய்ஸ்வால். மூன்று சிக்சர்கள் அடிதிருந்தாலும், அவரது இன்னிங்ஸ் முழுவதும் பவுண்டரிகள் தான் அதிகம்.


தொடர்புடைய செய்திகள்: CSK vs KKR Tickets: சேப்பாக்கத்தில் சென்னை அணியின் கடைசி லீக் போட்டி..! தொடங்கியது டிக்கெட் விற்பனை..! அலைமோதும் ரசிகர்கள்..!


முதல் ஓவரில் அதிக ரன்கள்


இந்த போட்டியில் பல சாதனைகளை தகர்த்தெறிந்த அவர், முதல் ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்ற சாதனையையும் படைத்தார். ஐபிஎல் இல் எக்ஸ்டிராக்கள் இல்லாமல் முதல் ஓவரில் அதிக ரன் குவித்த பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது ராஜஸ்தான் அணி. அதையும் ஒற்றை ஆளாக ஜெய்ஸ்வால் செய்துள்ளார். அவர் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரில் 26 ரன்களை குவித்தார். இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 23 ரன்கள் அடித்த ஆர்சிபி அணியின் சாதனையே முன்னிலையில் இருந்தது.



புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்


ஜெய்ஸ்வாலின் அதிரடியால் இந்த போட்டியை எளிதாக வென்ற ராஜஸ்தான் அணிக்கு இந்த வெற்றி புள்ளிப்பட்டியலில் பெறும் ஏற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக எல்லா அணிகளும் ரேஸில் இருக்கும் நேரத்தில் ரன் ரேட்டை வெகுவாக உயர்த்தி அணியை மேலும் உறுதியாக மாற்றியுள்ளது. 150 ரன்களை இலக்காக நிர்ணயித்த கொல்கத்தா அணி ஜெய்ஸ்வால் புயலில் சிக்கி சின்னாபின்னமானது. இறுதியாக ஜெய்ஸ்வால் வின்னிங் ஷாட் அடித்து வெற்றியை பெற்றுத்தருவதற்காக வைடுக்கு சென்ற 12வது ஓவரின் கடைசி பந்தை ஸ்ட்ரோக் வைத்து ஜெய்ஸ்வாலுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.