IPL 2024: போடு மஜாதான்! இனி ஒரே ஓவரில் இரண்டு பவுன்சர்கள்.. ஐபிஎல்-லில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் புதிய விதி..!

கடந்த ஐ.பி.எல்.க்கு முன்பே இம்பாக்ட் பிளேயர் மற்றும் நோ பால், வைட் பால் ரிவியூ செய்யும் விதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

ஐபிஎல் 2024க்கான ஏலம் துபாயில் இன்று அதாவது டிசம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட உள்ளது, ஆனால் அதற்கு முன்னதாக ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் சில விதிகள் மாற்றப்படலாம் என்றும், மேலும் சில புதிய விதிகள் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஐ.பி.எல்.க்கு முன்பே இம்பாக்ட் பிளேயர் மற்றும் நோ பால், வைட் பால் ரிவியூ செய்யும் விதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

ஒரே ஓவரில் இரண்டு பவுன்சர்கள்:

ESPNcricinfo இன் அறிக்கையின்படி, ஐபிஎல் இன் அடுத்த சீசன் அதாவது ஐபிஎல் 2024 முதல், ஐபிஎல் போட்டிகளின் ஒவ்வொரு ஓவரிலும் பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக 2 பவுன்சர்களை வீசலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 15 சீசன்களில் இப்படியான விதிகள் இருந்தது இல்லை. இதுவரை, சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள அதே விதிகள் ஐபிஎல்லில் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதன்படி பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவரில் அதிகபட்சமாக ஒரு பவுன்சர் வீச முடியும். அதற்கு மேல் பந்து வீசுவது நோ பால் என்று கருதப்பட்டது. இருப்பினும், இது இப்போது ஐபிஎல்லில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. ஆனால் இந்த புதிய விதி குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல்லில் சில புதிய விதிகள் சேர்க்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, ஐபிஎல் போட்டிகளில் இம்பாக்ட் ப்ளேயர் விதி அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. சிலர் இந்த இம்பாக்ட் விதியை விரும்பினர், சிலர் எதிர்த்தனர். அதே நேரத்தில், வைட் மற்றும் நோ பால் விஷயத்தில் கூட, பேட்ஸ்மேனுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், அதை அவரே தீர்க்க முடியும் என்று ரிவியூ செய்யும் உரிமை வழங்கப்பட்டது.

ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படவுள்ள மொத்தம் 77 வீரர்கள்: 

இருப்பினும், ஐபிஎல் விதிகள் பிரச்சினை பற்றி தகவல்களே உலா வந்தாலும், இதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் ஏலம் பற்றி இங்கு விவாதிக்கலாம். ஐபிஎல் 2024க்கான ஏலம் இன்று அதாவது டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 10 அணிகளும் ஏலத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. இம்முறை ஏலத்தில் 333 வீரர்களின் பெயர்கள் இடம்பெறவுள்ளன.அதில் 214 வீரர்கள் இந்தியர்களாகவும், 119 வீரர்கள் வெளிநாட்டு வீரர்களாகவும் உள்ளனர். இருப்பினும், இந்த ஏலத்தில் வீரர்களுக்கு 77 இடங்கள் மட்டுமே இதில் வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களின் எண்ணிக்கை 30 ஆகும். இந்த 77 வீரர்களில் அதிக விலை கொண்ட வீரர் யார் என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும். 

2023 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திராவும் மிகவும் விலையுயர்ந்த விலையில் விற்கப்படுவார் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த வீரர்களைத் தவிர, ஷர்துல் தாக்கூர், ஹர்ஷல் படேல், டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ், ஹாரி புரூக் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி போன்ற வீரர்களுக்கும் நிறைய பணம் பொழியலாம். ஏலத்தின் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 333 வீரர்கள் 19 செட்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இங்கு பேட்ஸ்மேன், ஆல்-ரவுண்டர், வேகப்பந்து வீச்சாளர், சுழற்பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், கேப்டு மற்றும் அன் கேப்ட் வீரர்கள் என வெவ்வேறு செட்களில் ஏலம் போவார்கள்.

எந்த அணியிடம் எவ்வளவு பணம் உள்ளது..? 

உரிமை மொத்த வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் மீதமுள்ள  தொகை
சென்னை 19 5 31.4
டெல்லி 16 4 28.95
குஜராத் 17 6 38.15
கொல்கத்தா 13 4 32.7
லக்னோ 19 6 13.15
மும்பை 17 4 17.75
பஞ்சாப் 17 6 29.1
பெங்களூர் 19 5 23.25
ராஜஸ்தான் 17 5 14.5
ஹைதராபாத் 19 5 34
மொத்தம் 173 50 262.95

 

Continues below advertisement
Sponsored Links by Taboola