கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனும், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரது பங்களிப்பு சந்தேகமாகவே உள்ளது. 


மீண்டும் மீண்டும் காயத்தால் அவதி:


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத ஷ்ரேயாஸ் ஐயர், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்ந்தார். அதேபோட்டியில் காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர், அகமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. 


தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்கவில்லை. அவருக்கு ஏற்பட்ட முதுகு வலி பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யுமாறு தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவக்குழு ஆலோசனை வழங்கியது. அறுவை சிகிச்சை செய்தால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும். 


இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளதாக், என்சிஏவின் ஆலோசனையை ஷ்ரேயாஸ் ஐயர் மறுத்து விட்டதாக தெரிகிறது. தற்போது மருத்துவர்களில் ஆலோசனைப்படி வீட்டில் ஷ்ரேயாஸ் ஐயர் ஓய்வெடுத்து வருகிறார். இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலக இருக்கிறார். 


கேகேஆரின் அடுத்த கேப்டன் யார்..? 


ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத சூழ்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ஷர்துல் தாக்கூர் மற்றும் சுனில் நரைன் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் அடுத்த கேகேஆர் கேப்டன் பதவிக்கான லிஸ்ட்டில் உள்ளனர். இருப்பினும் ஷர்துல் தாக்கூருக்குதான் அணி நிர்வாகம் முழு ஆதரவுடன் கேப்டன் பதவி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பரில் நடந்த மினி ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விடுவிக்கப்பட்ட ஷர்துலை கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்தது. இந்தநிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கொல்கத்தா அணியின் தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணா நியமிக்கப்பட்டுள்ளார். 


நரைன் ஏன் கேப்டனாக இல்லை..? 


UAE T20 லீக்கில் கேகேஆர் உரிமையாளரான அபுதாபி நைட்ரைடர்ஸ் அணியை சுனில் நரைன் வழிநடத்தினார். அவரது தலைமையிலான அந்த அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று கடைசி இடத்தை பிடித்தது. 


இதன் காரணமாகவே கொல்கத்தா அணி தலைமையை சுனில் நரைனுக்கு வழங்வில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது புதிய கேப்டனின் பெயரை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்ற நிலையில், நிதிஷ் ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை அணியை வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி எதிர்கொள்கிறது.