15வது ஐ.பி.எல். தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி அணியைச் சேர்ந்த 5 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி புனேவில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த காரணத்தால் மட்டுமே ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் ரசிகர்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண