2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. 


 


சென்னை அணி தற்போது 12 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் சென்னை வீரர் அம்பத்தி ராயுடு 15 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட்டான வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவின் சோக சாதனையை சமன் செய்துள்ளார். ரெய்னா மற்றும் ராயுடு ஆகிய இருவரும் 15 முறை ரன்வுட் ஆகியுள்ளனர். 


 


ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ரன் அவுட்டாகிய வீரர்கள்:


16 முறை - ஷிகர் தவான் மற்றும் கவுதம் காம்பீர்


15 முறை- ரெய்னா மற்றும் ராயுடு


14 முறை- ஏபிடிவில்லியர்ஸ்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண