கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதன்படி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 26-ந் தேதி சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர். மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளது. கடைசி லீக் போட்டி மே மாதம் 22-ந் தேதி ஹைதராபாத் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் நடைபெற உள்ளது.  






இரண்டு மாதம் நடைபெற உள்ள ஐ.பி.எல். திருவிழாவில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.