ரஷீத் கான் ஐபிஎல் கிரிக்கெட்டின் மர்ம சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். 5 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக விளையாடியும் எதிர் அணிகளால் அவரைக் கணிக்க முடியவில்லை. அனில் கும்ப்ளே போல் புயல் வேகத்தில் வீசுவதால் பேட்ஸ்மேன் பந்தைப் பார்ப்பதற்கே தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது. இது தவிர லெக் ஸ்பின் வீசும் அதே ஆக்சனில் தான் ரஷீத் கான் கூக்ளியும் வீசுவதால் மண்டையைப் பிய்த்துக் கொள்வதைத் தவிர பேட்ஸ்மேனுக்கு வேறு வழியில்லை.




KKR அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கில் கூக்ளியா லெக் ஸ்பின்னா என்பதை கணிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்ததை பார்த்தோம்.  இது தவிர அபாயகரமான வீரர் ரஸ்ஸலும் ரஷீத் கான் பந்துக்கு இரையானார். 4 ஓவர்கள் வீசிய அவர் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.ஹைதராபாத் அணி கோப்பை வெல்ல வேண்டும் என்றால்  இந்த தொடரில் ரஷீத் கான் நல்ல பார்மில் இருக்க வேண்டியது அவசியம்.