இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் கடைசியாக 2012-2013-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதன் பின்னர், பல்வேறு காரணங்களால் இரு அணிகளுக்கு இடையிலான தொடர் நடைபெறவில்லை. ஐசிசி மற்றும் ஆசிய கோப்பைக்கான தொடரில் மட்டும் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் எப்போது விளையாடும் என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனென்றால், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் விறுவிறுப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் எப்போதும் குறைவு இருந்ததில்லை.


இந்நிலையில், பாகிஸ்தானில் வெளியாகும் ‘ஜங்’ என்ற செய்தித் தாளில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடப்பாண்டில் நடைபெறும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டால் இது சாத்தியாமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.