இந்திய கிரிக்கெட்டின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக விராட் கோலி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பால் இந்திய ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்தாண்டு டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், இந்திய அணி நிர்வாகம் அவரை ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது.


தென்னாப்பிரிக்கா தொடரில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. ஆனால், அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோசமாக தோற்றது. இதையடுத்து, இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், தான் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக பெரிய விளக்க கடிதத்தை எழுதி அறிவித்திருக்கிறார் கோலி.



ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரலையில் காண : Live | Palamedu Jallikattu 2022 Live | ஜல்லிக்கட்டு 2022 நேரலை | Pongal 2022 | Jallikattu Live


அந்த அறிவிப்பில், “7 ஆண்டுக்கால உழைப்பு இது. இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும், சரியான பாதையில் கொண்டு செல்லவும் ஒவ்வொரு நாளும் அயராத உழைத்திருக்கிறேன். நான் செய்த வேலையில் நேர்மையாக இருந்திருக்கிறேன். எல்லாமும் ஒரு நாள் முடிவுக்கு வரவேண்டும், டெஸ்ட் கேப்டன் பொறுப்புக்கும் ஒரு முடிவு வந்திருக்கிறது. அது இப்போதுதான். இந்த பயணத்தையில், நிறைய ஏற்றங்களும், சில இறக்கங்களும் இருந்திருக்கிறது. ஆனால், ஒரு நாளும் நம்பிக்கை இழந்து முயற்சி செய்ய மறுத்ததே இல்லை. எப்போதும் என்னுடைய 120% பங்களிப்பை தர நினைத்திருக்கிறேன். அதுவே, சரியானது. என்னால், என்னுடைய பங்களிப்பை முழுமையாக தர முடியவில்லை என்றால், அது தவறென்றே நினைக்கிறேன். என்னுடைய முடிவில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய அணியிடம் நான் போலியாக இருக்க முடியாது.







இத்தனை ஆண்டுக்காலம் இந்திய அணியை வழிநடத்திச் செல்ல எனக்கு வாய்ப்பு அளித்த பிசிசிஐக்கும், ஒவ்வொரு அணி வீரருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த பயணத்தை மறக்க முடியாததாக மாற்றி இருக்கிறீர்கள். தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முன்னேறி சென்றதற்கு காரணமாக இருந்தவர், ரவி பாய். அவருக்கு நன்றிகள். கடைசியாக, எம்.எஸ் தோனி. என்னை ஒரு கேப்டனாக நம்பி, இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திச் செல்லும் திறமையான நபராக என்னைக் கண்டறிந்த தோனிக்கு நன்றி” என நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்.






இந்திய அணிக்கு நெருக்கடியான நேரத்தில் 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட்கோலி இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். இதில் இந்திய அணி 40 டெஸ்ட்களில் வெற்றி பெற்றுள்ளது. 17 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 11 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண