இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணத்திற்காக விலக முடிவு செய்துள்ளார். அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு கோலி மற்றும் அவரது மனைவு அனுஷ்கா சர்மா அழைக்கப்பட்டனர். ஆனால், தனிப்பட்ட காரணங்களால் கோலி இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. 


அதே சமயம் அயோத்தியில் டூப்ளிகேட் விராட் கோலி, சுற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்திய அணியின் ஜெர்சியில் டூப்ளிகேட் கோலி இருந்ததாகவும், மக்கள் அவரை சூழ்ந்திருப்பதையும் காணலாம். 






பெரும்பாலானோர் கையில் மொபைலை வைத்துக்கொண்டு செல்ஃபி எடுக்க முயல்கின்றனர். சிறிது நேரத்தில் கடுப்பான டூப்ளிகேட் கோலி, கோபமடைந்து அங்கிருந்து செல்ல முயற்சிக்கிறார். இருப்பினும், மக்கள் அவரை மீண்டும் சூழ்ந்துகொண்டு புகைப்படங்களை கிளிக் செய்ய தொடங்குகிறார்கள். வீடியோவின் முடிவில், டூப்ளிகெட் கோலி அங்கிருந்து ஓடுவதையும், ஆனால் ரசிகர்கள் விடாமல் பின்தொடர தொடங்கினர். 


முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி: 


இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக நேற்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி 25ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக இந்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. இதையடுத்து, விராட் கோலிக்கு பதிலாக மற்றொரு மாற்று வீரரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும். 


 இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுமாறு பிசிசிஐக்கு விராட் கோரிக்கை விடுத்துள்ளார்.


விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களிடம் பேசியதாகவும், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தனது முதன்மையான முன்னுரிமை என்றும் கூறினார். இருப்பினும், சில தனிப்பட்ட சூழ்நிலை காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. பிசிசிஐ தனது நட்சத்திர வீரரை முழுமையாக ஆதரிப்பதாகவும், சிறந்த பேட்ஸ்மேன் இல்லாவிட்டாலும் அணி மற்றும் வெற்றிபெறும் திறனை நம்புகிறோம். மீதமுள்ள வீரர்கள் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று வாரியம் நம்பிக்கை கொண்டுள்ளது. கோலியின் தனியுரிமையை அனைவரும் மதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். 


2024 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணிகள் 


IND vs ENG டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி (1வது மற்றும் 2வது டெஸ்ட்): ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், KL ராகுல் (WK), KS பாரத் (WK), துருவ் ஜூரல் (WK) , ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார், அவேஷ் கான்


IND vs ENG டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி : பென் ஸ்டோக்ஸ் (C), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ (WK), ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாக் க்ராவ்லி, பென் டக்கெட், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச் , ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வூட்.