டி20 உலகக் கோப்பை சாம்பியன்:


கடந்த ஜூன் 29 ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.  இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதில் முக்கிய பங்காற்றியது ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவர் தான். இந்த ஓவரில் தென் ஆப்பிரிக்காவுக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்த ஓவரின் முதல் பந்திலேயே டேவிட் மில்லரை ஹர்திக் பாண்டியா வெளியேற்றினார்.


டேவிட் மில்லர் ஆட்டமிழந்ததையடுத்து, இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அதிகரித்தது. இறுதியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இச்சூழலில் இந்திய அணி வீரர்கள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். 


வைரல் வீடியோ:






இந்நிலையில் தான் ஐபிஎல் அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஹர்திக் பாண்டியாவின் சகோதரரும்  இந்திய அணியின் வீரருமான க்ருனால் பாண்டிய, டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டிய வீசிய கடைசி ஓவரை மொபைலில் பார்க்கிறார்.


பின்னர் இந்த வீடியோவை பார்த்த அவர் தேம்பி அழ ஆரம்பித்தார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சகோதரர்களுக்கு இடையே உள்ள பாசம் எவ்வளவு அழகானது என்பது போன்ற கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க: ”கடினமான காலங்கள் நீடிக்காது, ஆனால் கடினமான மனிதர்கள் சாதிக்கிறார்கள்”- இந்திய வீரர்களை கெளரவித்த அம்பானி குடும்பத்தினர்!


 


மேலும் படிக்க: IND vs ZIM T20 Match Highlights: டி20 உலக சாம்பியனை சுருட்டி வீசிய ஜிம்பாப்வே!