இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்குபவர் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின். இவர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜாக் க்ராவ்லி விக்கெட்டினை கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினை கைப்பற்றிய 9வது சர்வதேச வீரர் என்றும், 500 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 


சென்னை மண்ணின் வீரர்:


500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வினுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஸ்வினுடன் எடுத்துக்கொண்ட பழைய படத்தினைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் தெரிவித்துள்ள வாழ்த்தில், “ சாதனைகளை முறியடித்து கனவுகளை வெல்லும் சென்னை மண்ணின் வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகள்.


சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தான் வீசும் ஒவ்வொரு சுழற்பந்திலும் பல்வேறு சாதனைகளை உருவாக்கி வருகின்றார். 500 விக்கெட்டுகள் கைப்பற்றி மிகச் சிறப்பான சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார். சென்னை மண்ணின் சொந்த ஜாம்பவானுக்கு இன்னும் பல விக்கெட்டுகளும் வெற்றிகளும் வந்து சேர வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார். 






அதேபோல் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ள வாழ்த்து குறிப்பில், வாழ்த்துகள் அஸ்வின். நம்பமுடியாத சாதனையப் படைத்து எங்களை பெருமைப்படுத்திவிட்டீர்கள் என குறிப்பிட்டுள்ளார். 






சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 500 விக்கெட்டுகள் கைப்பற்றியதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.