உள்ளூர் கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை தொடரில் கோவா அணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாகியுள்ளார்.


ஆல்-ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், இளம் வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பயிற்சி பெற்று வந்த அர்ஜுன் டெண்டுல்கர், ஆல்-ரவுண்டராக உருவாகியுள்ளார்.


இந்நிலையில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் குரூப் சி பிரிவில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு வயது 23. இதற்கு முன்பே கடந்த ஆண்டு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் விளையாடவில்லை.






இந்நிலையில், கோவா அணியில் இடம்பிடித்துள்ளார். இடது கை பந்துவீச்சாளரான அவர், இன்றைய ஆட்டத்தில் விளையாடினார். முதல் நாள் முடிவில் கோவா அணி 5 விக்கெட் இழப்புக்கு 85 ஓவர்களில் 210 ரன்களை எடுத்துள்ளது.


4 ரன்களுடன் அர்ஜுன் டெண்டுல்கரும், சயுஷ் பிரபுதேசாய் 81 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.