தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். காயம் காரணமாக ரோகித் விலகியுள்ளார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் கூறினார். அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் அணியில் இடம்பெற்றுள்ளார்.






மும்பையில் நேற்று நடந்த பயிற்சியின் போது ரோகித்தின் இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவில் விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக, ‘கேப்டன் ரோகித் தனது அணி வீரர்களான அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த், கேஎல் ராகுல் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் மதியம் ஷரத் பவார் அகாடமியில் நெட்ஸில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். இந்த பயிற்சியின் போது, ​​இந்தியாவின் த்ரோ-டவுன் ஸ்பெஷலிஸ்ட் ரகுவேந்திரா வீசிய பந்தை ரோகித் ஷர்மாவின் கையில் பட்டது. அதன் பிறகு ரோகித் மிகவும் வேதனைப்பட்டார்’ என்று இன்சைட் ஸ்போர்ட் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


இந்திய அணி டிசம்பர் 16ஆம் தேதி மும்பையில் இருந்து தென்னாப்பிரிக்கா செல்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஓமிக்ரானின் அச்சுறுத்தல் காரணமாக, தொடர் பயோ-பப்பில் அணி இருக்கும். இந்தியா - தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட்  டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் மைதானத்தில் தொடங்குகிறது.


தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், மயங்க் அகர்வால்,  புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (WK), விருத்திமான் சாஹா (WK), ), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.


காத்திருப்பு வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்ஜன் நாக்வாஸ்வாலா.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண