இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல நட்சத்திர வீரர் ரிஷப்பண்ட். இந்திய அணியின் இளம் வீரரான இவர் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருபவர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கியில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.


தற்போது, டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


பிரதமர் பிரார்த்தனை:


இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் விபத்தில் சிக்கியிருப்பது வேதனை அளிக்கிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.






விபத்தில் தலையில் பலமாக 2 வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது முதுகிலும் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று காலை பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். பிரதமர் மோடி தனது தாய்க்கு செய்ய வேண்டிய இறுதிக்கடமைகளை நேரில் சென்று செய்தார்.




இந்த சோகமான சூழலிலும் மாலையில் மத்திய அரசின் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தற்போது, ரிஷப்பண்ட் மீண்டு வர வேண்டும் என்று ட்விட்டரில் பிரார்த்திருப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இருந்து தனது வீட்டிற்கு ரிஷப்பண்ட் சென்று  கொண்டிருந்தபோது இந்த விபத்து அரங்கேறியுள்ளது. ரிஷப்பண்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Rishabh Pant Accident: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!


மேலும் படிக்க: Rishabh Pant Car Accident: நான் தூங்கிவிட்டேன், கார் டிவைடரில் மோதியது.. உயிர் பிழைத்த ரிஷப் பண்ட் சொன்னது இதுதான்!