வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கியுள்ளது. முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தாலும், ஹர்திக் பாண்டியாவை இன்றுவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வசைபாடி வருகின்றனர். 


என்ன நடந்தது..? 


இந்திய அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 6 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது, திலக் வர்மா 47 ரன்களுடன் அவுட்டாகாமல் விளையாடிக்கொண்டிருந்தார். 18வது ஓவரில் ஹர்திக் பாண்டியா 1 ரன் எடுத்து திலக்கிடம் ஸ்டிரைக் கொடுத்து போட்டியை முடிக்க சொன்னார். ஆனா, திலக் ஒரு ரன் எடுக்க, ஹர்திக் மற்றொரு ரன் எடுத்து திலக்கிற்கு அரைசதம் எட்ட மீண்டும் வாய்ப்பைத்தார். அப்போது, திலக் வர்மாவால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பொறுமையிழந்த ஹர்திக் பாண்டியா அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுதந்தார். இதனால் திலக் வர்மாவின் சர்வதேச டி20யின் இரண்டாவது அரைசதம் கலைந்தது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை ‘சுயநலமானவர்’ என்று திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், கோலிக்கு ஆதரவாக 2014ல் எம்.எஸ். தோனி செய்ததையும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.






2014 டி20 உலகக் கோப்பை: 






2014 டி20 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஒருமுறை விராட் கோலி 68 ரன்களுக்கு விளையாடிக் கொண்டிருந்தார். இந்திய அணி வெற்றி பெற 7 பந்துகளில் 1 ரன் எடுக்க வேண்டும். மகேந்திர சிங் தோனி வேலைநிறுத்தத்தில் இருந்தார். ஆனால் மகேந்திர சிங் தோனி அந்த பந்தை அடிக்காமல், அதை கட்டையை போட்டார். உண்மையில், மகேந்திர சிங் தோனி விராட் கோலி வின்னிங் ஷாட் எடுக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்தார். அடுத்த ஓவரில் விராட் கோலி வின்னிங் ஷாட்டை அடித்தார். அப்போது, மகேந்திர சிங் தோனியை சமூக வலைத்தள ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். மகேந்திர சிங் தோனியைப் போல ஹர்திக் பாண்டியாவும் செய்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 





இதேபோல், கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், வைட் பந்தை தடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.