இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு முந்தைய நாளான இன்று பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில், பாலிவுட் உலகம் மட்டுமின்றி, கிரிக்கெட் உலகை சார்ந்தவர்களும், பிற துறைகளை சேர்ந்த பிரபலங்களும் விழாவில் பங்கேற்க உள்ளனர். 






இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் டிஜே பிராவோ, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளனர். 














முன்னதாக, டி20 தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது மனைவி தேவிகா ஷெட்டியுடன் வந்தடைந்தார். அதன்பிறகு, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அவரது மனைவியுடனும், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் குடும்பத்தினரும் திருமணம் நடைபெறும் ஜாம்நகர் வந்தடைந்தனர். 


ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்:


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை ஜூலை மாதம் திருமணம் செய்யத் தயாராக உள்ளார். இந்த ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இன்று முதல் தொடங்கியுள்ளன. ஆனந்த்-ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1 முதல் 3 வரை நடைபெறும். இந்த திருமணத்தின் பங்கேற்க பாலிவுட் முதல் சர்வதேச நட்சத்திரங்கள் வரை பல பெரிய பிரமுகர்கள் பங்கேற்க ஜாம்நகர் சென்றடைந்துள்ளனர்.


 பாலிவுட் நட்சத்திரங்கள் வருகை:


ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் கலந்து கொள்ள பல பாலிவுட் பிரபலங்கள் ஏற்கனவே ஜாம்நகர் சென்றடைந்துள்ளனர். நேற்று, பாலிவுட்டின் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் ஜாம்நகர் சென்றடைந்தார். சல்மான் கான் முதல் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, அர்ஜுன் கபூர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர், திரைப்பட தயாரிப்பாளர் அயன் முகர்ஜி ஆகியோரும் ஜாம்நகரை அடைந்துள்ளனர். ஜவான் படத்தின் இயக்குனர் அட்லி தனது மனைவி மற்றும் மகனுடன் வந்துள்ளார். 


சர்வதேச விருந்தினர்களில் மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான், சர்வதேச பாப் நட்சத்திரம் ரிஹானா, பல இசைக்கலைஞர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாஸிஸ்ட் ஆடம் பிளாக்ஸ்டோன் ஆகியோர் ஆனந்த்-ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக குஜராத்தின் ஜாம்நகர் சென்றடைந்தனர்.