உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் ஜோ ரூட். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பல வெற்றிகளை தேடித்தந்தவர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டியிலும் தோற்றது. இதனால், இங்கிலாந்து அணி மீதும், ஜோ ரூட் மீதும் கடும் விமர்சனங்கள் குவிந்தது.


இந்த நிலையில், இங்கிலாந்த அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். புதிய கேப்டனாக பென்ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.