இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. முதலாவது டி20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில் இன்றைய போட்டிக்கு இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக அந்தப் போட்டியில் இஷான் கிஷன் உடன் தீபக் ஹூடா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனை எடுக்காதது தொடர்பாக ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.


 






இந்தச் சூழலில் இரண்டாவது போட்டிக்கான அணியில் அவர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன் 17 போட்டிகளில் 458 ரன்கள் விளாசியிருந்தார். அவர் நல்ல ஃபார்மில் இருந்தார். இதன்காரணமாக அவரை முதல் டி20 போட்டியில் எடுக்காத போது ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். 


 


இந்த ஒரு மாற்றம் தவிர வேகப்பந்துவீச்சாளர்களில் அவேஷ் கான் அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரில் ஒருவர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து அணியை ஒயிட்வாஷ் செய்ய முழு முனைப்புடன் செயல்படும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. அதன்பின்னர் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண