இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணியில் இடம்பிடித்தார். இந்தத் தொடருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். 


இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய புதிய போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் போட்டோவில் அவர் மொட்டை அடித்து வேட்டி சட்டையுடன் இருக்கிறார். அந்த போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “சும்மா அதிருதுல” என்ற சிவாஜி திரைபடத்தின் வசனத்தையும் பகிர்ந்துள்ளார். 






அவரின் இந்தப் பதிவை தற்போது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் அவரின் இந்த புதிய லுக் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். வாஷிங்டன் சுந்தர் 2021 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணிக்கு தேர்வாகியிருந்தார். அப்போது பயிற்சி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இங்கிலாந்து தொடர், ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்கவில்லை. அதன்பின்னர் சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களில் காயத்தில் இருந்து மீண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


இதன்காரணமாக தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும் அந்த தொடருக்கு செல்வதற்கு முன்பாக இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்காரணமாக அவருக்கு பதிலாக தென்னப்பரிக்கா ஒருநாள் தொடருக்கு ஜெய்ந்த் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்த வாஷிங்டன் சுந்தர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இந்தியாவையும், அதன் மக்களையும் ஏன் இவ்ளோ லவ் பண்றேன் தெரியுமா?- வைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் பதிவு !