இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இந்தியா - இங்கிலாந்து போட்டியை நேரில் கண்டுகளித்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.


இங்கிலாந்து அணிக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும், டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாகிய மகேந்திரசிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் போட்டியை நேரில் கண்டுகளித்துள்ளார்.




பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்ற போட்டியை நேரில் கண்டுகளித்த தோனி, இந்திய வீரர்களை சந்தித்தும் உள்ளார். இந்திய அணியின் விக்கெட்கீப்பர் ரிஷப்பண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் மகேந்திர சிங் தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.






ரிஷப்பண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில், இரட்டிப்பு வெற்றி. அடுத்ததை முன்னோக்கிச் செல்கிறோம் என்று பதிவிட்டு நேற்றைய போட்டியின் புகைப்படங்களையும், தோனியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி, உலககோப்பை, டி20 உலககோப்பையை வென்றுத்தந்த தோனி பல்வேறு அரிய சாதனைகளை செய்துள்ளார். கடந்த 7-ந் தேதி தன்னுடைய 41வது பிறந்தநாளை தோனி கொண்டாடினர். தோனி கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.  




இந்திய அணி நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளும் மோதும் மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.


மேலும் படிக்க : India vs England 2nd T20 : புவி ஸ்விங்.. கேப்டன்சியில் ரோகித் கிங்... 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!


மேலும் படிக்க : Sri Lanka crisis : ”இலங்கை குழந்தைகளுக்கு உதவுங்கள்”... கிரிக்கெட் ஆட போன இடத்தில் உருக்கமாக பேசிய ஆஸி கேப்டன்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண