இந்திய கிரிக்கெட் அணி வரும் 18ஆம் தேதி முதல் ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டிருந்தது. 


இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் முழு உடற்தகுதி பெற்றுள்ளார். இதன்காரணமாக ஜிம்பாவே தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ஷிகர் தவான் துணை கேப்டனாக மாற்றப்பட்டுள்ளார்.


 






இந்தத் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய தீபக் சாஹர் தற்போது இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். 


இந்திய அணியின் விவரம்:


கே.எல்.ராகுல்(கேப்டன்),ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்


 


இந்தியா-ஜிம்பாவே தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி தொடங்குகிறது. 18ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி 20ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 22ஆம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள்  போட்டி நடைபெற உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை சமீபத்தில் வென்றது. இதைத் தொடர்ந்து அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும் கே.எல்.ராகுலுக்கு ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக ஜிம்பாவே தொடர் நல்ல பயிற்சியாக அமையும் என்று கருதியுள்ளதால் அவர் அணியின் கேப்டனாக இந்தத் தொடரில் விளையாட உள்ளார்.


இந்தத் தொடருக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா,பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண