இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, மீண்டும் ஒருமுறை பேட்டிங்கில் சொதப்பியதால் ரசிகர்களால் இரக்கமின்றி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் பந்து வீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.


விராட் கோலி, தனது வாழ்க்கையில் கேப்டன் பதவியின் சர்ச்சைக்கு பிறகு இந்திய அணியில் விளையாடி வருகிறார். இந்தநிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ODI போட்டியின்போது கோலி இரண்டு பந்தில் டக் அவுட் ஆனார். இன்னிங்ஸின் ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய வந்த ரோஹித் ஷர்மாவின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, இந்திய இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் அல்சாரி ஜோசப் மூலம் விராட் ஆட்டமிழந்தார்.






இந்தநிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி ஒட்டுமொத்தமாக 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் முறையே 8 மற்றும் 18 ரன்களும் அடங்கும். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் அடித்த இரண்டாவது குறைந்த ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதையடுத்து, தற்போது இந்திய ரசிகர்கள் விராட் கோலியை சமூக வலைத்தளங்களில் பங்கமாக கிண்டல் செய்து வருகின்றனர். அவை பின்வருமாறு : 














மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண