IND vs SA T20 Final LIVE Score: 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சாம்பியன்.. கெத்து காட்டிய ரோஹித் படை..!
IND vs SA T20 World Cup 2024 Final LIVE Score: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நேரலையை இங்கே பார்ப்போம்
9 ஓவர்கள் முடிந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி 62 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு தென்னாப்பிரிக்க அணி 32 ரன்கள் எடுத்துள்ளது.
ஐடன் மார்க்ராம் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் அவுட் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
18 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலி 49 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார்.
47 ரன்கள் எடுத்திருந்த அக்சார் பட்டேல், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
விராட் கோலி மற்றும் அக்சார் பட்டேலின் நிதான ஆட்டத்தால் தற்போது 13 ஓவர்களில் 100 ரன்களை நெருங்கியுள்ளது.
2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.
2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்துள்ளது.
ரபாடா வீசிய 5 வது ஓவரில் 3 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் யாதவ் கிளாசெனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேசவ் மகாராஜ் வீசிய 2வது ஓவரில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். வந்த வேகத்தில் ரிஷப் பண்ட்-டும் டக் அவுட்டாகி வெளியேறினார்.
முதல் ஓவரில் தான் சந்தித்த 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் விராட் கோலி. முதல் ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை எடுத்துள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால், கிரிக்கெட் வரலாற்றில் 50 டி20 போட்டிகளில் வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுவார்.
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 248 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 62 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்தால் , ஒரு டி20 உலகக் கோப்பையில் 319 ரன்கள் எடுத்த விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார் .
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா
2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் இன்னும் சற்று நிமிடத்தில் டாஸ் போடப்படும்.
2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் நேருக்கு நேர் மோதுகின்றன. இவர்களில் யார் வெற்றி பெற்றாலும், அந்த அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.20.4 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். மறுபுறம், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு இதில் பாதி அதாவது ரூ.10.6 கோடி கிடைக்கும். இதுபோக, அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு 6.5 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இதுவரை மொத்தம் 26 டி20 சர்வதேச போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி அதிகபட்சமாக 14 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவடையாமல் இருந்தது. டி20 உலகக் கோப்பையை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் இடையே 6 போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 4 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
பார்படாஸ் வானிலை குறித்து சமூக வலைதளங்களில் பல வகையான அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அளித்த தகவலின்படி, தற்போது மழை பெய்யவில்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இறுதிப்போட்டி சரியான நேரத்தில் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோத உள்ள டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ள பார்படாஸில் தற்போது மழை நிற்க தொடங்கியுள்ளது.
Background
இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி, பார்படாஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா Vs தென்னாப்ரிக்கா:
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகள் ஆகியவற்றை தொடர்ந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மூன்றாவது முறையாகவும், தென்னாப்ரிக்கா அணி முதல் முறையாகவும் முன்னேறியுள்ளது.
தங்களது இரண்டாவது டி20 கோப்பையை வெல்ல இந்திய அணியும், முதல் ஐசிசி கோப்பையை வெல்ல தென்னாப்ரிக்கா அணியும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் போட்டி, இன்று தொடங்கியுள்ளது.
இந்திய அணியின் பலம் பலவீனங்கள்:
நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிரதான பலம் பந்துவீச்சு என்பதே உண்மை. பும்ரா வழிநடத்தும் பவுலிங் யூனிட்டில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் துல்லியமாக பந்துவீசுவதோடு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் எடுத்து வருகின்றனர். சுழற்பந்துவீச்சில் குல்தீப் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் எதிரணிக்கு மிடில் ஓவர்களில் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
பேட்டிங் யூனிட் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், சரியான நேரத்தில் பேட்ஸ்மேன்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ரன் குவித்து வருகின்றனர். இறுதிக் கட்டங்களில் அக்ஷர் படேலும் கைகொடுப்பது அணிக்கு பலன் அளிக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக டி20 உலக் கோப்பையை வெல்ல முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதேநேரம், தொடர்ந்து சொதப்பி வரும் கோலி, ஜடேஜா மற்றும் துபே போன்றவர்களும், இன்று சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி கோப்பையை வெல்வது உறுதி.
தென்னாப்பிரிக்கா அணியின் பலம், பலவீனங்கள்:
நடப்பு டி20 உலகக் கோப்பையில் ஒரு தோல்வியை கூடாத மற்றொரு அணியாக தென்னாப்ரிக்கா உள்ளது. இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என சரியான கலவையில் அமைந்துள்ள இந்த அணி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி வருகிறது. பேட்டிங்கில் டி காக், மார்க்ரம், ஸ்டப்ஸ், கிளாசென் மற்றும் மில்லர் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் ரபாடா, பார்ட்மேன் மற்றும் நோர்ட்ஜே ஆகியோர் எதிரணிகளுக்கு கடும் நெருக்கடியை தந்து வருகின்றனர். இதனால், தென்னாப்ரிக்காவை வீழ்த்துவது இந்திய அணிக்கு அவ்வளவு எளிய காரியமாக இருக்காது என்பதே உண்மை.
நேருக்கு நேர்:
சர்வதேச டி20 போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 14 முறையும், தென்னாப்ரிக்கா அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
பார்படாஸ் மைதான புள்ளி விவரங்கள்:
பார்படாஸ் மைதானத்தில் இதுவரை 32 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 19 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. அதிகபட்சமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி 224 ரன்களை குவித்துள்ளது. அதேநேரம், குறைந்தபட்சமாக தென்னாப்ரிக்க அணிக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அணி 80 ரன்களை சேர்த்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -