Ind vs Eng 3rd Odi : ஃபார்முக்காக போராடும் கோலி! அணிக்கு திரும்பும் பண்ட்? 3வது ஒரு நாள் போட்டி பிளேயிங் 11 எப்படி இருக்கும்?

Ind vs Eng 3rd Odi : மூன்றாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், அனைவரின் கவனமும் இந்திய அணியின் பிளேயிங்-11-ல் சில மாற்றங்கள் இருக்கலாம்

Continues below advertisement

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.  இப்போது மூன்றாவது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், அனைவரின் கவனமும் இந்திய அணியின் பிளேயிங்-11 மீது இருக்கும். ஏற்கனவே தொடரை வென்ற இந்திய அணி, இந்த போட்டியில் மாற்றங்களைச் செய்யலாம்.

Continues below advertisement

3வது ஒரு நாள் போட்டி:

சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகுவதற்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாட்மல் இருந்த வீரர்களுக்கு மூன்றாவது போட்டியில் வாய்ப்பு அளிப்பதன் மூலம், கேப்டன் ரோஹித் சர்மாவும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் தங்கள் பலத்தை சோதித்து பார்க்க இந்த போட்டி உதவியாக இருக்கும்.

மூன்றாவது போட்டியில் பண்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் பெரும்பாலானவர்களின் கேள்வியாக உள்ளது. அவருக்குப் பதிலாக விளையாடும் கே.எல். ராகுல், பேட்டிங்கில்  ஃபார்மில் இல்லாதது இந்தியாவுக்கு ஒரு பிரச்சனையாக உள்ளது. மூன்றாவது போட்டியில், சாம்பியன்ஸ் டிராபியில் பிளேயிங்-11 இல் எந்த விக்கெட் கீப்பரைக் கருத்தில் கொள்ளலாம் என்பதைப் பார்க்க அணி நிர்வாகம் பண்டிற்கு ஒரு வாய்ப்பை வழங்க முடியும்.

முகமது ஷமிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.இடது கை பந்து வீச்சாளர் சாம்பியன்ஸ் டிராபி அணியில் உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு சோதிக்கப்படலாம். அதேபோல், வருண் சக்ரவர்த்திக்கு ஓய்வு அளிப்பதன் மூலம் குல்தீப் யாதவை மீண்டும் அணிக்குள் கொண்டு வர முடியும். வருண் சாம்பியன்ஸ் டிராபி அணியில் தற்போது வரை சேர்க்கப்படவில்லை . குல்தீப்பிற்கு அவரது இடத்தில் ஒரு வாய்ப்பு கொடுப்பதன் மூலம், அவர் சாம்பியனஸ் டிராபி தொடருக்கு  தயாராக இருக்க முடியும்.

இதையும் படிங்க: பூர்வீக கோயில் கும்பாபிஷேகம் - குடும்பத்துடன் கலந்து கொண்ட சிஎஸ்கே வீரர்

ரோஹித் ஓய்வு எடுப்பாரா?

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் அற்புதமான சதம் அடித்திருந்தார். கட்டாக் மைதானம் முழுவதும் ஷாட்களை அடித்து, சாம்பியன்ஸ் டிராபிக்கு தான் தயாராக இருப்பதை தெளிவுபடுத்தினார். அணி தொடரை வென்றுவிட்டது, எனவே அவர் ஓய்வெடுத்து ஷுப்மான் கில்லை கேப்டனாக நியமிக்கலாம், முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு நீக்கப்பட்ட அவருக்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறலாம் எனறு கூறப்படுகிறது. 

விராட் கோலியின் ஃபார்ம் இன்னும் கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது, எனவே அவர் நீக்கப்பட மாட்டார். இந்தப் போட்டி கோஹ்லி தனது ஃபார்முக்கு திரும்பவும், சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு தேவையான நம்பிக்கையைப் பெறவும் ஒரு வாய்ப்பாகும். 
 
இதையும் படிங்க: CSK : தயாரகும் ஹரியானா எக்ஸ்பிரஸ்! பந்து வீச்சை பலப்படுத்தும் சிஎஸ்கே... பதிரானவுக்கு பதில் இவரா?

உத்தேச அணி: 

ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola