இந்தியா - ஆஸ்திரேலியா:


ஐசிசி உலகக் கோப்பை தொடருக்குப் பின் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. அதன்படி, 5 டி20 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இது வரை மூன்று போட்டிகள் முடிந்துள்ளன.


முன்னதாக,  கடந்த நவம்பர் 24-ஆம் தேதி  விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.


அதேபோல், நவம்பர் 26 ஆம் தேதி  நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இச்சூழலில், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா இல்லை தோல்வியில் இருந்து ஆஸ்திரேலிய அணி மீண்டு வருமா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு எழுந்தது.


இதனிடையே, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவர் த்ரில் வெற்றி பெற்றது.


மேலும் , அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு போராடிய மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்நிலையில் தான் நாளை (டிசம்பர் 1 ) ஆம் தேதி நடைபெறும் 4 -வது போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன. இந்த போட்டி ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாரயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.


வெற்றி வாய்ப்பு யாருக்கு?


இந்நிலையில், இந்த தொடரில் 2 வெற்றிகளை இந்திய அணியும், ஒரு வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணியும் இருக்கிறது. இதனால் நாளை நடைபெறும் போட்டி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


அதன்படி, இந்திய அணியில் ஸ்ரேயாஸ், திலக் வர்மா, ஜெய்ஸ்வால் ,ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் மற்றும் ரிங் சிங் ஆகியோர் நல்ல முறையில் தங்களது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.  நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 57 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ருதுராஜ் அதிரடியாக 123 ரன்களை குவித்தார்.


அதேநேரம் இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்துவரை சொதப்பலாகவே இருக்கிறது. அக்ஸர் படேன். பிரசித் கிருஷ்ணா, அர்ஜித் சிங் ஆகியோர் ரன்களை அள்ளிக்கொடுத்து வருகின்றனர். தீபஹ் சாகர் , முகேஸ் குமார், ரவி பிஸ்னோய் ஆகியோரும் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும், ஆஸ்திரேலிய அணியினரை பொறுத்தவரை ட்ராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் ஆகியோர் நன்றாக பேட்டிங் செய்கின்றனர். அதேபோல் பந்து வீச்சை பொறுத்த வரை ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் , கேன் ரிச்சர்ட்சன் மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். ஆனாலும், முதல் இரண்டு போட்டிகளில் அந்த அணி தோல்வியையே தழுவியஇச்சூழலில் தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதால் நன்றாக விளையாட முயற்சி  செய்யும். அதேபோல், கடைசி சமயங்களில் சொதப்பும் இந்திய அணியும் ஆஸ்திரேலியாவை எப்படியும் வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆடும் என்பதால் ரசிகர்களுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.