IND Vs AUS 3rd T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஆஸ்திரேலியா உடன் இன்று 3வது டி20 போட்டி

IND Vs AUS 3rd T20: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.

Continues below advertisement

IND Vs AUS 3rd T20: கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Continues below advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 தொடர்:

அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் வெறி பெற்று இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்:

அதன்படி, கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்த போட்டியில் வென்று தொடரை 3-0 என கைப்பற்ற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், தொடரை இழந்துவிடக்கூடாது என ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் - பலவீனங்கள்:

ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய வீரர்கள் பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குகின்றனர். இன்றைய போட்டியில் ரன்களை கட்டுப்படுத்தாவிட்டால், வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்.  மறுமுனையில், உலகக் கோப்பையில் விளையாடிய அணியை பெரிய மாற்றம் எதுவும் இன்றி ஆஸ்திரேலிய அணி அப்படியே களமிறக்கியுள்ளது. இருப்பினும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருப்பது, முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இன்றைய போட்டியிலாவது அவர்களது பந்துவீச்சு எடுபடுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மைதானம் எப்படி?

கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இன்றைய போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கலாம் செலுத்தலாம். இரண்டாவது பாதியில் பனி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது. இந்திய அணி இதுவரை இங்கு 3 டி-20 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது. ஒரு போட்டிய்ல் முடிவு எட்டப்படவில்லை. 

உத்தேச அணி விவரம்:

இந்திய அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா:

ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட்/டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி/மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன்), சீன் அப்போட், நாதன் எலிஸ், ஜாசன் பெரென்டோர்ப், தன்வீர் சங்கா/ஆடம் ஜம்பா.

Continues below advertisement