தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பெற்ற வெற்றி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. 


புள்ளிகள் அட்டவணையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். தற்போதைய டெஸ்ட் புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 66.67 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 64.06 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 


இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுமா இந்தியா..? 


நடைபெற்று வரும் பார்டர்- கவாஸ்கர் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஆனால், மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மீண்டு வந்து வென்றால் இந்தியா அணி 63.16 புள்ளிகள் சரிந்துவிடும். இந்த சூழ்நிலையில், வரவிருக்கு தொடரில் இலங்கை அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வென்றால், இறுதிப்போட்டியில் இலங்கை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். 


இறுதிப்போட்டி:


இந்தியா 3-0, 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றால், 68.06 வெற்றி சதவீதத்துடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆஸ்திரேலியா தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்தால், புள்ளிகள் சதவீதம் 60க்கு கீழே குறையும். இதன்மூலம், இந்தியா- இலங்கை இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு அமையும். 


இப்படி நடைபெறாமல் இருக்க இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வியை சந்தித்து, ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் தோற்றால், இந்தியாவுடன் சேர்ந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இந்த சூழ்நிலையில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, இறுதிப்போட்டியில் தங்கள் இடத்தை உறுதி செய்வதற்காக இந்தியா மற்றொரு டெஸ்டில் வெற்றி பெறுவதைத் தடுக்க முயற்சிக்கும்.


இந்திய அணியின் பலம்: 


இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதல் இரண்டு டெஸ்டில் முக்கிய பங்கு வகித்தனர். இது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பெரியளவில் வெற்றியை பெற்று தந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி இந்தூரில் வருகின்ற 1ம் தேதி நடைபெறுகிறது.