இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்பான விஷயம் என்றால் அது எப்போதும் சமூக வலைதளங்களில் வைரல் தான். அதிலும் குறிப்பாக அவர் செய்த செயல் தொடர்பாக ஒரு பதிவு என்றால் அது நிச்சயம் வைரலாகிவிடும். அந்தவகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தோனி தொடர்பாக ஒரு பதிவை செய்துள்ளார். அந்தப் பதிவு தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. 


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ஹரீஸ் ராஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “ஜாம்பவன் மற்றும் கேப்டன் கூல் தோனி தன்னுடைய நம்பர் 7 ஜெர்ஸியை எனக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளார். அவர் தன்னுடைய அன்பு மற்றும் சிறப்பான செயல்கள் மூலம் இன்னும் பலரின் இதயங்களை வென்று வருகிறார். இந்த பரிசை பெற எனக்கு அதரவாக இருந்த ரஸலுக்கு எனது நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.






இந்தப் பதிவை சுட்டிக்காட்டி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஸல் அருணால்ட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அந்தப் பதிவில்,”நம்ம கேப்டன் தோனி உறுதியளித்தால் அதை நிச்சயம் செய்துவிடுவார். அந்த பரிசு உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார். 






ஏற்கெனவே டி20 உலகக் கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஒருவருடன் மகேந்திர தோனி பேசிய வீடியோ மிகவும் வேகமாக வைரலானது. தற்போதைய பாகிஸ்தான் அணியில் இருக்கும் பல வீரர்கள் தோனியின் தீவிர ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: சர்வதேச டி20 போட்டிகளில் தாமதமாக பந்து வீசினால்..- புதிய விதிமுறையில் சிக்சர் அடித்த ஐசிசி