இந்திய கிரிக்கெட் அணியின் கவனம் இப்போது அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு மாறியுள்ள நிலையில், யார்யார் எங்கு விளையாட வேண்டும், ஒவ்வொரு நிலைக்கும் யார் பேக்-அப் விருப்பங்கள் என்பது பற்றிய விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி எல்லா இடத்திற்கும் சரியான வீரரை தேர்வு செய்யும் ஆடிஷனைத் தொடங்கியுள்ளது. ஐசிசி கோப்பைகள் இல்லாத குறையை அடுத்த ஆண்டு உள்நாட்டில் முறியடிக்கும் வேட்கையில் உள்ளது. இந்த விவாதங்களுக்கு மத்தியில், முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்புகளை பாதிக்கக்கூடிய ஒரு நட்சத்திர வீரர் மீண்டும் வரலாம் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



ஷ்ரேயாஸ் முன்னிலை


இந்தியாவின் மிடில்-ஆர்டரில் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், மற்றும் சூர்யகுமார் யாதவ் என இன்னும் பலர் அணியில் இடம் பெறுவதற்கான ஆடிஷன்களில் உள்ளனர். ஆனால் இதில் ஷ்ரேயாஸ் ஐயர் 2022 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் ஒரு கணிசமான ரன்களை குவித்து முன்னணியில் உள்ளார். இவ்வருடம் அவர் 15 போட்டிகளில் 58.09 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் 639 ரன்கள் எடுத்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: அடிக்கடி செல்போனில் பேசிய மனைவி... ஆத்திரத்தில் தாலியால் கழுத்தை நெரித்து கொன்ற காதல் கணவன் - நடந்தது என்ன?


போட்டி நல்லதுதான்


மறுபுறம், ராகுல் இந்த ஆண்டு வெறும் எட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷுக்கு எதிரான தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியது உட்பட, அவர் 32.71 சராசரியில் இரண்டு அரைசதங்களுடன் 229 ரன்கள் எடுத்துள்ளார். மிடில் ஆர்டரில் நிலவும் போட்டி குறித்து சோனி ஸ்போர்ட்ஸிடம் பேசிய கவாஸ்கர், ராகுல் மற்றும் ஐயர் இடையேயான போட்டி இருவருக்குமே பயனளிக்கும் என்று கூறினார். “இருவரில் ஒருவர்தான் உள்ளே செல்வார்கள் என்ற நிலை எழுந்தால் இருவருமே வரவிருக்கும் போட்டிகளில் நல்ல ரன்களை குவிக்க நினைப்பார்கள். அது இருவருக்குமே நல்ல விஷயம்தான்", என்றார்.



குறுக்க இந்த ஹர்திக் வந்தா!


மேலும் அவர்கள் இருவரும் சிறந்த பீல்டர்கள் மற்றும் கே.எல்.ராகுலால் ஃபீல்டிங் மூலம் (கீப்பிங் அல்ல) விக்கெட்டுகளை எடுக்க முடியும், இது மிகப்பெரிய பிளஸ் ஆகும். எனவே, 5 மற்றும் 6-வது இடங்களுக்கு இதுபோன்ற போட்டிகள் நடைபெறுவது நல்லதுதான். ஆனால், ஹர்திக் பாண்டியா விரைவில் ஒரு நாள் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்,” என்று அவர் கூறினார். ஹர்திக் இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார், இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், அரை சதத்துடன் 100 ரன்கள் எடுத்தார். அவர் மூன்று இன்னிங்ஸ் முழுவதும் 17 ஓவர்கள் பந்துவீசி ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் தவிர்க்கமுடியாத டானாக உருவாகியுள்ள அவர் ஓய்வு முடிந்து திரும்பினால் அது இந்த இருவரில் ஒருவரை வெளியில் அமரவைக்க வேண்டிய நிலையை உருவாக்கும் என்கிறார் கவாஸ்கர்.