இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்றது. 


இந்தநிலையில் டாக்காவில்  வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஈடுபட்டிருந்த இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுலுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காயம் காரணமாக நாளை தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால், இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ள புஜாரா தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


காயம் தீவிரமாக இல்லை:


கேஎல் ராகுல் காயம் குறித்து  இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”கேஎல் ராகுலின் காயம் தீவிரமாக இல்லை. அவர் நலமாக இருப்பதாகவே தெரிகிறது. நன்றாக இருப்பார் என்று நம்புகிறேன். மருத்துவர்கள் சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்” என்றார். 


தொடர்ந்து பேசிய அவர், வங்கதேசத்திற்கு எதிரான போட்டி எங்களுக்கு நல்ல பயிற்சி. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் தனது முதல் சதத்தை இந்த டெஸ்ட் தொடரில் விளாசினார். அனுபவமிக்க சேட்டேஷ்வர் புஜாரா இரண்டாவது இன்னிங்ஸில் 102 ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் எடுத்தார், இது கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது 19வது டெஸ்ட் சதத்துடன் இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்க டெஸ்டில் சிறப்பாக விளையாடினர்.


இருப்பினும், ஸ்டாண்ட்-இன் கேப்டன் கே.எல். ராகுல் 22 மற்றும் 23 ரன்களுடனும், விராட் கோலி ஒற்றை இலக்க எண்களுடன் வெளியேறினர். இருப்பினும், ராகுல் மற்றும் கோலி இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடுவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார். 


தொடர் காயம்:


வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஸ்லிப்பில் பீல்டிங் செய்யும் போது ரோஹித் சர்மாவின் கட்டை விரலில் மோசமான காயம் ஏற்பட்டது. அதனால் காயம் காரணமாக 1வது டெஸ்டில் இருந்து விலகினார். கேஎல் ராகுல் கேப்டனாகவும், சேட்டேஷ்வர் புஜாரா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா இன்னும் விளையாட தகுதியற்ற நிலையில், கேஎல் ராகுல் மீண்டும் மிர்பூரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது காயம் தீவிரமாக இருந்தால், புஜாரா தனது வாழ்க்கையில் முதல்முறையாக இந்தியாவை கேப்டனாக வழிநடத்துவதைப் பார்க்கலாம்.


ஆட்டத்திற்கு முன் நீண்ட காயம் பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்றொரு பெயர் நவ்தீப் சைனி, அவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து,  காயத்தில் இருந்து மீட்க பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA) அனுப்பப்பட்டார். முன்னதாக, வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் மீண்டும் களமிறங்க திட்டமிடப்பட்டிருந்த ரவீந்திர ஜடேஜா, காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் நீக்கப்பட்டார். காயம் காரணமாக முகமது ஷமியும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.