டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து மேலும் 5 பேர் பங்கேற்கின்றனர்.   4*400 பிரிவில் ரேவதி, தனலெட்சுமி, சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் பங்கேற்கின்றனர்.


திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த  தனலெட்சுமி (வயது 22) பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனக்கு கிடைத்த இறுதி வாய்ப்பில், முழு முயற்சியை செலுத்தினேன். என் தாயிடம் சொன்னேன், அவர் நம்பவே இல்லை. ஊடங்கங்களில் வந்த பிறகே நம்பினார் என்றார்.