தஞ்சாவூர்: பொன்னியின் செல்வன் படம் பார்த்தவங்களுக்கு வந்திய தேவன் என்ற பெயர் மறக்கவே மறக்காது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஏற்று நடித்திருந்த கேரக்டர்தான். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் அமைந்திருந்த ஒரு பாத்திரப்படைப்பு.
இந்தப் படத்துல ஏகப்பட்ட கேரக்டர்ஸ் இருப்பாங்க. அதை எல்லாம் தாண்டி வந்தியதேவன் அனைவரையும் கவர்ந்து இழுத்து இருப்பார். அட யார் இந்த வந்திய தேவன் கற்பனை கதாபாத்திரம் தானே என்று நினைத்து இருப்பீர்கள். ரொம்பவே நம்ம மனசுல நின்ன ஒரு கதாபாத்திரம்தான் இந்த வல்லவராயன் வந்திய தேவன். இவருக்கு உருவம் கொடுத்த சிலை எங்கு இருக்கு என்று தெரியுங்களா? அட ஆமாங்க வந்திய தேவனின் கற்பனை கதாபாத்திரத்திற்கு உருவம் கொடுத்த சிலை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் இருக்கு. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதிகோயில் என்ற கிராமத்தில் மிகவும் பழமையான புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான ஆலந்தூர் புள்ளமங்கை கோயிலில்தான் இந்த அற்புதமான வந்தியதேவன் கதாபாத்திர படைப்பிற்கு உருவம் கொடுத்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. முதலாம் பராந்தக சோழன் கட்டிய இந்த கோயில் அற்புதமான கட்டிட கலையுடனும், மெய் சிலிர்க்க வைக்கும் சிலை வடிவமைப்புடனும் நிறைந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்று. சுமார் 1100 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்தது.