கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழா. பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். 


தமிழகத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர் ஆலயத்திற்கு நிகராக கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. மூலவர் கணபதிக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, அருகம்புல் மாலை மற்றும் பல்வேறு வர்ண மாலையால் அலங்காரம் செய்யப்பட்டு, அரிசி மாவால் மூலவர் கணபதி அழகு திரு முகத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு,  பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


கரூர் திருமாநிலையூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு 100 கவுளி வெற்றிலையால் பகவதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.


 




 


கரூர் மாவட்டத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் திருமாநிலையூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு பகவதி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக 100 கவுளி வெற்றிலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திருமாநிலையூர் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். 


கரூர் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு மூலவர் ஆதி மாரியம்மனுக்கு புற்றுக்கண் மாரியம்மன் அலங்காரம்.


 




 


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோணி குடித்தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் மாரியம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் ஆதி மாரியம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் புற்றுக்கண் மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.  சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறி, தூப தீபங்கள் காட்டப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயம் வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.  ஆதி மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.