தஞ்சாவூர்: ஆண்டுகள் உருண்டோடினாலும் நல்ல மெய்க்க விநாயகர் கோயிலின் பழமை மாறாமல் அப்படியே பாதுகாத்து வருகின்றனர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடசேரி மக்கள். நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். முழு முதற் கடவுள். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம் உயிரோடு கலந்து உறவாடும் தெய்வம் பிள்ளையார். எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று அனைத்தும் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு பிள்ளையாருக்கு உண்டு. விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய பெருமைகள் கொண்ட விநாயகருக்கு பழமை மாறாமல் ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் வடசேரியில் ஓடுகள் வேயப்பட்ட வீடு போன்ற அமைப்பில் கோயில் இருக்கிறது. வடசேரியை சேர்ந்த பொதுமக்களின் வீடுகளில் நடக்கும் அனைத்து விசேஷங்களும் இக்கோயில் இருந்துதான் தொடங்கப்படும். எங்களின் மூத்தவர் இவர்தான் என்று பெருமையுடன் சொல்கின்றனர் வடசேரி மக்கள்.
பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வரும் நல்ல மெய்க்க விநாயகர் கோயில்
என்.நாகராஜன் | 26 Apr 2023 01:39 PM (IST)
விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம்.
நல்ல மெய்க்க விநாயகர் கோயில்
Published at: 26 Apr 2023 01:39 PM (IST)