பிரசித்தி பெற்ற சீர்காழியை அடுத்த சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ குபேர மகாலட்சுமி யாகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


சித்ததர்புரம் சித்தர் பீடம்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் இவ் சித்தர் பீடம் தோற்றுவிக்கப்பட்டது.  இந்த ஒளிலாயம் சித்தர் பீடத்தில் 18 சித்தர்களும் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர். 18 படிகள் கொண்ட விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கு அமைந்துள்ளது.


Samagra Shiksha Abhiyan: மத்திய அரசு தராத எஸ்எஸ்ஏ நிதி; தமிழ்நாட்டில் 32,500 அரசு ஊழியர்களுக்கு ஊதியம் நிலுவை!




ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமி 7 -ம் ஆண்டு குருபூஜை விழா


இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும், அது போன்று பீடத்தின் நிறுவனர் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 7 -ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பீடத்தின் வளாகத்தில் உலக நன்மை வேண்டி ஸ்ரீ குபேர மகாலட்சுமி மகா யாகம் நடைபெற்றது. இதில், ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி வித்யாலட்சுமி, தனலட்சுமி, அஷ்ட லட்சுமி அம்மாள்கள் எழுந்தருள செய்யப்பட்டு அவர்கள் முன்பாக பிரமாண்டமாக 61  யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 மூலிகை அடங்கிய தட்டுகள் சீர்வரிசை எடுத்து வரப்பட்டு மகா யாகம் நடைபெற்றது.


ICC Women's T20 World Cup 2024: மகளிர் டி 20 உலகக் கோப்பை - மல்லு கட்டும் 10 அணிகள்! வீராங்கனைகள் யார்?




பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள்


பின்னர் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த மகா யாகத்தில் மயிலாடுதுறை மற்றும் இன்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.  மேலும் விழாவில் சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பவுன்ராஜ், பாரதி, சக்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் சித்தர் பீடம் அமைந்துள்ளது சுற்றுவட்டார பகுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.


புரட்டாசி மஹாளய அமாவாசை - பூம்புகார் உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்....!