மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறையில் அமைந்துள்ளது திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் கோயில்


மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறையில் அமைந்துள்ளது திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் கோயில். சிவபெருமானின் சாபத்துக்கு உள்ளாகிய பார்வதிதேவி, பசு உருவம் கொண்டு பூலோகத்தின் பல்வேறு தலங்களில் சாப நிவர்த்தி வேண்டி வழிபாடு நடத்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்த போது, விநாயகப் பெருமான் பசு உருவம் கொண்ட அன்னையை கோமுக்தீஸ்வரர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு அன்னையின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த இறைவன் தேவியின் பசு உருவத்தை நீக்கி பழைய திருவுருவுக்கு மாற்றினார். 


Annamalai, Tamilisai Arrest: டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது...



அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா... பரவசத்தில் பக்தர்கள்..!


கும்பாபிஷேக விழா பூர்வாங்க பூஜை


அன்னைக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றதால் இத்தலத்தில் உள்ள விநாயகர் பெருமான் அன்னைக்கு வழிகாட்டிய விநாயகர் என்ற பெயரில் கோயிலின் தென்கிழக்கு மூலையில் அருள் பாலிக்கிறார். இந்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த 14 -ஆம் தேதி பூர்வாங்க பூஜையுடன் தொடங்கியது‌. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக தினமான இன்று காலை நடந்த நான்காம் கால யாகசாலை பூஜையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகா புர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது வண்புருஷோத்தமன் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ திருவிழா... பரவசத்தில் பக்தர்கள்...!




புனிதநீர் அடங்கிய கடங்கள்


அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டது. புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலைமையில் சுமந்து மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்தை அடைந்தனர். அதனை அடுத்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கடங்களில் இருந்த புனித நீரை கொண்டு கோயில் கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம்  இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.