மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான சிவனை அபயாம்பிகை அம்மன் மயிலுரு கொண்டு பூஜித்து சாப விமோசனம் அடைந்த புகழ்வாய்ந்த பழமையான மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயிலை சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் கடந்த 16 -ஆண்டுகளாக மயூரநாதர் கோயில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். 




இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மயிலாடுதுறை  சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை 17 -ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி கடந்த 15 -ம் தேதி இரவு தொடங்கியது. இந்த நாட்டியாஞ்சலி நிகழ்வானது தொடர்ந்து  4 நாட்கள் பெறுகிறது. மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதிவாணன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். 


CEE: ராணுவப் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் - தேர்வு நடைமுறையை மாற்றி அமைத்த அரசு




இதில் முதல் நாள் நிகழ்வில் பத்மஸ்ரீ லீலா சாம்சன் மற்றும் சென்னை, கோவை, சேலம், மயிலாடுதுறை, பெங்களூரு, வாலாஜா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மங்கள இசை உடன் துவங்கிய நிகழ்வில் கோவை ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் வழங்கிய வந்தே பாரதம் நிகழ்ச்சியில் பல மாநில நாட்டியக் கலைகளின் சங்கமமான கதக், ஒடிசி, மோகினியாட்டம், பரதநாட்டியம் குச்சுப்புடி உள்ளிட்ட  ஒரே நேரத்தில் நடைபெற்ற வந்தே பாரதம் நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து இரண்டாம் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, பெங்களூர் பகுதிகளில் இருந்து பரதநாட்டிய கலைஞர்கள்  பங்கேற்ற பல்வேறு நாட்டிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. 


Thiruvannamalai ATM Theft: ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு 3-ந் தேதி வரை நீதிமன்ற காவல் - நீதிபதி உத்தரவு




இதில் குறிப்பாக மயிலாடுதுறை சப்த ஸ்வரங்கள் நாட்டிய பள்ளி மாணவிகள் பங்கேற்ற அறுபடை வீடு என்ற தலைப்பில் ஆன நாட்டிய நாடகம் முருகனின் பிறப்பு துவங்கி மனக் கோலம் வரையில், அறுபடை வீடுகளில் புரிந்த திருவிளையாடல்கள் அவ்வை பாட்டிக்கு நாவல் பழம் அளித்த கதை, சூரபத்மனை சம்காரம் செய்தது, தந்தைக்கு ஓங்காரத்தை உபதேசம் செய்தது, வள்ளி தெய்வானை கரம் பிடித்தது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நாட்டிய நாடகமாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஒரு மணி நேரத்தில் அறுபடை வீடுகளில் பெருமையை 30 மாணவிகள் முருகப்பெருமானுக்கு சமர்ப்பணம் செய்தனர். இதனை பார்வையாளர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று நாட்டிய கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.