இன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் 21 உபகோயில்கள் மதியம் 12.30 மணி முதல் நாளை காலை வரை நடை சாத்தப்படும் - கோயில் நிர்வாகம்.
உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில்
மதுரையில் உள்ள மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உள்ளூர் முதல் வெளிநாடு வரையிலான லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். இத்தகைய மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்நிலையில் கோயில் நடை சாத்தப்படும் என்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்படும்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் இன்று மத்திம காலதீர்த்தம், மத்திம காலஅபிஷேகம், மத்திம காலசுவாமி புறப்பாடு, 11.41 மணிக்கு நடைபெறும். இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு மேல் கோயில் நடை சாத்தப்படும் என்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது இந்த நேரத்தில் பக்தர்கள், பொது மக்கள் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோஅனுமதி இல்லை
நாளை திங்கள் கிழமை காலை முதல் வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்யலாம்
மீனாட்சியம்மன் கோயிலுக்கு உட்பட்ட உபகோவில்களான தெப்பக்குளம் மாரியம்மன்கோவில், முக்தீஸ்வரர் கோயில், பைரவர் கோவில், வடக்குவாசல் அனுமார் திருக்கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர்கோயில், செல்லத்தம்மன்கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோயில், கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோவில் உள்ளிட்ட 21 கோயில்களின் நடையும் இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை அதிகாலை வரைநடை சாத்தப்படும் - கோயில் இணை ஆணையர் அறிவிப்பு செய்துள்ளார்.