கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.


 




தமிழகத்தில் பல்வேறு முருகன் ஆலயங்களில் ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேர், நெய் இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.




அதை தொடர்ந்து பாலமுருகனுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி பண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.


பின்னர் அதைத் தொடர்ந்து தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


 


 




 


ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் பாலமுருகனை வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


இதேபோல்,  எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு அழகன் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.


அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அழகன் பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து அழகன் முருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து விபூதி அலங்காரம் செய்யப்பட்ட பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் ஆலயத்தின் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறினார்.


அதைத் தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


அருள்மிகு ஸ்ரீ எல்ஜிபி நகர் குபேசக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத கிருத்திகை பூஜையை காண ஏராளமான ஆன்மீக பொதுமக்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.