மதுராந்தகம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவில் இளைஞர்கள் உறியடித்தும் சறுக்கு மரம் ஏறியும் திறமைகளை வெளிப்படுத்தினர்.

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சிக்குட்பட்ட மேலவலம் பேட்டை கிராமத்தில் 33 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியையொட்டி 5 -ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணர் ஜெயந்தி விழாவில் உறியடி நிகழ்ச்சி மற்றும் சறுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



 

இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு உறியடித்தனர். பல இளைஞர்கள் சறுக்கு மரம் ஏறி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




 

உத்திரமேரூர் அருகே தனியார் பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் உட்பட தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடினர். 

 

இதேபோன்று காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள சாலவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் துவக்கப்பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் அங்கு படிக்கும் இஸ்லாமிய குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு பள்ளிக்கு அழைத்து வந்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார். அதேபோல மற்ற மதத்தினரும் தங்கள் பிள்ளைகளை கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு பள்ளிக்கு அழைத்து வந்தனர். 


 

அந்த பள்ளியின் தாளாளர் மீர் என்.தாஜுதீன் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்  குழந்தைகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த விழாவில் மெட்ரோ லயன்ஸ் தலைவர் பாக்கியநாதன், சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியா சக்திவேல், சாலவாக்கம் லயன்ஸ் தலைவர் அப்துல் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை கவிதா வரவேற்று பேசினார் துணைத் தலைமையாசிரியை சசிகலா நன்றி கூறினார்.