Krishna Janmashtami 2023: இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ரோகிணி நட்சத்திரம் செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 9.20 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 7-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகிறது.


கிருஷ்ண ஜெயந்தி 2023:


காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களும் தனித்தனி சிறப்பு வாய்ந்ததாகும். அந்த 10 அவதாரங்களில் ஒவ்வொரு அவதாரமும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. அதில் மிக, மிக சிறப்பு வாய்ந்தது அவர் எடுத்த 9-வது அவதாரமான கிருஷ்ண அவதாரமாகும். கம்சனை அழிக்க விஷ்ணு எடுத்த கிருஷ்ண அவதாரமே கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi) என்ற பெயரிலும், கோகுலாஷ்டமி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி வரும் 6-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி மிக மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி தேய்பிறை அஷ்டமியில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்திக்கான திதி நேரம் 6ஆம் தேதி இரவு 9.13 மணி முதல் மறுநாள் ( அதாவது 7-ஆம் தேதி) இரவு 9.14 வரை உள்ளது. கிருஷ்ணர் அவதரித்த ரோகிணி நட்சத்திரம் என்பதால், கிருஷ்ண ஜெயந்தியன்று ரோகிணி நட்சத்திரம் மதியம் 3.24க்கு தொடங்கி மறுநாள் மதியம் 3.23க்கு முடிவடைகிறது. கிருஷ்ண ஜெயந்திக்கான திதியும், ரோகிணி நட்சத்திரமும் 7-ஆம் தேதியும் வந்தாலும் கிருஷ்ண ஜெயந்தியை 6-ஆம் தேதியே கொண்டாட வேண்டும்.  கிருஷ்ண ஜெயந்தியை மாலை நேரத்தில் கொண்டாடுவது சிறப்பு ஆகும்.  இந்த நேரத்தில் நீங்கள் விரதம்  இருக்க நினைத்தால் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை என நம்பப்படுபவற்றைக் காணலாம்.


விரதம் இருப்பவர்கள் செய்யக் கூடியவை:



  • கிருஷ்ண ஜெயந்தி அன்று, பலர் உணவு  மட்டுமில்லாமல், தண்ணீர் கூட குடிக்காமல் விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். சிலர் உணவு சாப்பிடாமல் பழங்களை மட்டும் சாப்பிடுகின்றனர். ஆனால், விரதத்தின்போது, கஞ்சி, கிச்சடி, சப்பாத்தி, நெய் சாதம் உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டும்.

  • கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் உணவு, தண்ணீர் போன்றவைகளை தானம் செய்வது புன்னியம் தரும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். அதேபோல, விரதம் இருக்கும்போது, தேவைப்படும்பவர்கள் உணவு, தண்ணீர், தானம் செய்யலாம் என்று கூறுகின்றனர். 

  • பசுக்கள் பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் நெருக்கமானவ. ஜென்மாஷ்டமி விரதத்தின் போது பசுக்களுக்கு உணவளிப்பதும் உன்னதமானதாக கருதப்படுகிறது. 

  • விரதம் இருப்பவர்கள் உலர் பழங்கள், பழங்களை உட்கொள்ள வேண்டும். அதாவது, ஆப்பிள், ப்ளாக் பெர்ரிகள், வாழைப்பழங்கள், திராட்சைகள், பாதாம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

  • ஜென்மாஷ்டமி விரதத்தின்போது, பால், தயிர், பழச்சாறு போன்ற பானங்களை அருந்தலாம் என்று கூறப்படுகிறது.


விரதம் இருப்பவர்கள் செய்யக் கூடாதவை:



  • ஜென்மாஷ்டமியன்று விரதம் இருக்கும்போது வெங்காயம் அல்லது பூண்டை பயன்படுத்தவோ, சாப்பிடவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது

  •  விரதத்தின் போது அசைவ உணவுகளை உட்கொள்வது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

  • உண்ணாவிரதத்தின் போது பலர் தங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க டீ அல்லது காபி குடிப்பார்கள். அதன் இரண்டையும் விரதத்தின்போது தவிர்க்க வேண்டும். 

  • பக்தர்கள் சாப்பிடுவதற்கு அல்லது பரிமாறுவதற்குப் பயன்படுத்தப்படும் எந்தப் பாத்திரங்களும் அசைவ உணவுக்குப் பயன்படுத்தப்படாமலும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • விரதத்தின்போது எண்ணெய் உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். அதற்கு பதிலாக பழங்கள், பால் மற்றும் பழச்சாறுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.