கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுவாமி வாராகி அம்மன் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.


 




ஆடி வெள்ளியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மூலவர் வேம்பு மாரியம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வாராகி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த பிறகு சாமிக்கு பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு  வாராகி அம்மன் அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.




கரூர் மினி பேருந்து நிலைய அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு ஆடி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.


ஆடி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு பாராகி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மினி பேருந்து நிலைய அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு ஆடி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, குங்குமம், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது




அதன் தொடர்ச்சியாக வாராஹி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.



கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற ஆடி மாத பஞ்சமி திதி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.